வள்ளலார் சிறப்பு மிக்க ஆன்மிகவாதிகளில் ஒருவர். இறைவன், ஜோதி வடிவில் இருப்பதாக தன் அருள் கொண்டு உணர்ந்தவர். அவர் வழி பின்பற்றும் பலரும் இன்றும், இறைவனை ஜோதி வடிவிலேயே வழிபாடு செய்து வருகிறார்கள். தான் வாழ்ந்த காலங்களில் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர் வள்ளலார்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மருந்தாய் மணியாய் மந்திரமாய் இருப்பது
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மருந்தாய் மந்திரமாய் மணியாய் இருப்பதை அருட்பா ஆறாம்திருமுறை "காட்சி களிப்பு"என்ற 41 வது தலைப்பில் 7வது பாடலில் ,
மருந்தானை மணியானை வழுத்தா
நின்ற மந்திரங்க
ளானானை
வானநாட்டு
விருந்தானை உறவானை நண்பினானை....
என்று மருந்தாயும் மணியாயும் மந்திரமாயும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே இருந்து அருள்பாளிப்பதையும் நமது அருட்பெருந் தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்கள்.
திருமூலரின் சொல்லும் சோதியின் சிறப்பு
மந்திரம் -15
வேதியு மாய்விரிந்து ஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே.
பொருள் :
சிவன் உலகினைப் படைப்பவனாயும் அழிப்பவனாயும் உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும், அவற்றைக் கடந்து நிறைந்து விளங்குகிறான். திருவருள் சோதியாகயும் குவிதல் இல்லாத இயல்போடு ஊழைச் செலுத்துபவனாயும் படைத்துக் காத்து அழித்து உயிர்களுக்கு வினையை ஊட்டுவிப்பான்.
திருவருள் சோதியாயும், என்றும் அழியாத தன்மையோடு நிறைந்து உள்ளான் என்று கூறியுள்ளார்.
எட்டாம் திருமுறையில், 29 திருவாசகம்- அருட்பத்து, பாடல் முதலில் "சோதியே சுடரே சூழொளி விளக்கே...." என்று
திரு.மாணிக்கவசகர் கூறியுள்ளார்.
சோதிப் பிழம்பானவனே! ஒளிப் பிழம்பில் உள்ள கதிர்களாய் உள்ளவனே! சூழ்ந்த ஒளியை உடைய விளக்குப் போன்ற வனே! என்று பொழிப்புரையாகும்.
நம் சித்தர்கள், ஞானிகள் ஜோதியை ஆண்டவனாக அறிந்து கொண்டார்கள். அதை போல் நாமும் சித்தர்கள் எழுதியுள்ள மந்திரங்கள் படித்து உணர்ந்து, அருள்ளொளியால் முத்தேக சித்தி அனுபவத்தைப் பெறுவதற்கு முயல்வோம்.
சர்வமும் அவனுக்குள் அடக்கம்.