Monday, August 31, 2020

கோயிலுக்குள் ஆச்சரியமான சிலைகள்!


இந்த படம் அருள்மிகு ஸ்ரீ வரமூர்த்திஸ்வரார் கோயில், அரியதுறை என்ற இடத்தில் உள்ளது. இக்கோயில், சில புகழ்பெற்ற அம்சங்களின் அடிப்படையில் 6000 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார்
சிலர் குஞ்சு சோழன் மன்னர் பெயர், இந்த கோயில் செதுக்கப்பட்டது. ஆகையால் இந்த கோயில் நிச்சயமாக சோழர் காலத்தில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது 1000 ஆண்டுகள் பழமையானது.
இன்று நுண்ணோக்கி (microscope) கண்டு பிடிக்கப்பட்டு வதற்கு முன்னேயே கருத்தரித்தல் (fertilization) விவரங்கள் நம் சித்தர்கள் கூறும் அறிவுரைகளை செதுக்கப்பட்டது.


இக்கோயில் செதுக்கப்பட்டது. அதை பற்றி பார்க்கலாம்.

ஆச்சரியமாக இருக்கிறது!! ஆம் நூற்றாண்டின் முன் செதுக்கப்பட்டது. இப்படத்தில் பெண்ணுடைய முட்டை கருவும் , ஆண்ணுடைய விந்தும் காணலாம். முதல் படம் வரமூர்த்திஸ்வரர் கோயில்களில் உள்ளது. இரண்டாம் படம் நுண்ணோக்கி வழியாக எடுத்த படம்.

இப்படத்தில் ஜோதிடம் படி மீன் என்ற வடிவம் 'சொர்க்கம்' என்று சொல்லுவார்கள். வானத்தில் இருக்கும் நட்சத்திரம் மீனுடன் இணைக்கப்பட்டு, நட்சத்திரங்கள் சொர்க்க கடலில் நீந்தப் படுகிறது என்று குறிப்பிடப்பட்டதாம். மேலும் பல்வேறு மொழி பெயர்ப்பாளர்கள் இந்த மீன் நட்சத்திரத்திற்கும் கிரகத்திற்கும் பொருந்தும் என்று அடையாளம் கண்டுள்ளனர்.

ஆன்மா சொர்க்கத்தில் இருந்து கருப்பையில் வருவார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது கருத்திரித்தல் என்று அழைக்கப்படுகிறது. ஆகையால் நம் முன்னோர்கள் பேரன் பேத்தி வழியால் பிறக்கிறார்கள்.

குறிப்பு: ஜோதிடம் என்பது அண்ட வெளியிலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் கூறும் செய்திகளாகும். மனிதன் பிறந்த நேரத்தில் வான் பொருட்களின் சுழற்சி மற்றும் அவற்றின் போக்கு, இவற்றை பற்றி மனிதனில் அவை ஏற்படுத்தும் தாக்கம் பற்றி கணித்து கூறுவதாகும். வான் பொருட்கள் கூறும் செய்திகளை அறிந்துகொள்ள நமக்கு வான் பொருட்களின் மொழி தெரிய வேண்டும். அந்த மொழி தான் ஜோதிடம்.

இது போன்ற பல கோயில்கள் செதுக்கப்பட்ட கருத்தரித்தல், பிரசவம் வழிமுறைகள் நம் தமிழ் நாட்டில் உள்ளது. "‌அருள்மிகு கர்பாராக்ஷம்பிகை சமேத" இடம் திருக்கருகாவூர், "ஸ்ரீ முல்லைவனநாதர்" இடம் திருக்கருகாவூர், பாபனாசம்.

Source : twitter picture by V.Gopalan 

இந்த கோயில்கள் சில பிராத்தனைகளில் செயல்முறை கர்ப்பத்துக்கு தொடர்புடையது. மேலும் பெண்ணோயியல் பிரச்சினைகள் (gynecology problem) இந்த கோயில்களில் அர்பணித்துள்ளது.
ராஜா ராஜா சோழன் காலத்தில் (985-1014); பராந்தக சோழன் கல்வெட்டுகள் உள்ளது. 

சித்தர்கள் தாங்கள் ஞானத்தால் உணர்ந்ததை அவர்களின் வழி காட்டுதலிண் படி இச் சிற்பங்கள் ஆலயங்களில் வடிவமைக்கப்பட்டன. 
ராஜ ராஜ சோழனுக்கு ஆலோசனை சொன்ன கருவூர் சித்தர். இவர்கள் சமூகத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு சேவைகள். ஆகையால் அவர்களை போற்றி வணங்குவோம்!

நன்றி
சர்வமும் அவனுக்குள் அடக்கம்!

Source: 
*Google images





Wednesday, August 26, 2020

நம் தினசரி சொல்லும் மந்திரத்தின் அர்த்தம்

ஆத்ம தரிசனம் என்ற புத்தகத்தில் சொல்ல பட்ட மந்திரத்தின் பலன்கள் இங்கு உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

மேலும் இந்த மந்திரமும் தியானமும் எப்படி செய்வது என்று இந்த புத்தகத்தில் உள்ளன. அதன்படி செய்ய வேண்டும். மேலும் அறிய இந்த 

Website link : Anadha Jothi பாருங்கள்.

"ஓம் நமசிவாய நம"

*இந்த மந்திரத்தை சொல்லும் போது பூத சுத்தி செய்வதற்கு அதாவது, நீ பஞ்சபூதங்களையும் தெளிவதற்காக. 
*நீ பஞ்சபூதங்களைத் தெளிந்து பெற்ற திறன், உன் இந்திரியங்களால் கிரகித்துக் கொள்ளப்படுகிறது.

"ஓம் பிரம்மா விஷ்ணு ருத்ர மஹேஸ்வராய நமஹ"

இந்த மந்திரத்தை சொல்லும் போது, நீ உன் இந்திரியங்களைத் தெளிந்து பெற்ற திறன் உன் உணர்ச்சிகளால் கிரஹித்துக் கொள்ளப்படுகிறது. 

"ஓம் ஹ ஹீ ஹு ஓ ஹோ நமஹ"

இந்த மந்திரத்தை உச்சரிப்பதால், உன்‌ உணர்ச்சிகள், உன் விருப்பு  பவித்திரமாகின்றன. உன் மனம், தொண்டை பகுதியைச் சேரும் போது நீ உணர்ச்சிகளைத் தெளிந்து பெற்ற திறன், எதையும் புரிந்து கொள்ளும் திறன் கிரஹித்துக் கொள்ளப்படுகிறது. 

"ஓம் ஹ்ரீம் ஸீம் க்லீம் ஸௌம் நமஹ."

இந்த மந்திரத்தை உச்சரிப்பதால், உன் மனம் நாக்கின் கடுப்பாகத்தைச் சேரும் போது, எதையும் புரிந்துந்கொள்ளும் உன் திறன் எது சரி, எது தவறு என்பதை அறியும் திறன் கிரஹித்துக் கொள்ளப்படுகிறது.

"ஓம் லம் வம் ரம் யம் ஹம் நமஹ.”

இந்த மந்திரம், எது சரி, எது தவறு என்று அறியும் உன் திறனைப்
பவித்திரமாக்குகிறது, திரிகுண சுத்தி ஏற்படுகிறது.

"ஓம் சிவாயவசி சிவாய நமஹ"

இந்த மந்திரம் உன் லட்சியத்தைப் பவித்திரமாக்குகிறது. உன் மனத்தை புருவ மத்திக்குக் கொண்டுவந்ததும் என்னுடைய 'லட்சியம், 'கவித்துவத்தால்' கிரஹித்துக்கொள்ளப்படுகிறது. 

"ஓம் சிவ சரணம்"

இந்த மந்திரம் பிந்துமய
சுத்திக்காகச் சொல்லப்படுகிறது. அதாவது, உன் கவித்துவம் பவித்திரமாகிறது. நெற்றியின் மையத்தைத் தன் ஸ்தானமாகக் கொண்டுள்ள 'நினைவாற்றல்' உன் கவித்திறனை' கிரஹித்துக்கொள்கிறது. 

"ஓம் சிவ சிவா போற்றி”

இந்த மந்திரத்தால் உன் ‘நினைவாற்றல்' பவித்திரமாகிறது. அதாவது, நாதமாய் சுத்தி,' ஏற்படுகிறது. உன் மூளையின் அடிப்பாகத்தைத் தன் ஸ்தானமாகக் கொண்டுள்ள விவேகம் தனக்கு முந்தைய ஸ்தானத்தில் நிலை கொண்டிருந்த நினைவாற்றலை' கிரஹித்துக்கொள்கிறது.

"ஓம் சிவ சிவ நமஸ்தே நமஸ்து."

இந்த மந்திரத்தைச் சொல்வதால் உன் விவேகம் பவித்திரமடைகிறது இதைத்தான் கலாமய சுத்தி' என்றழைக்கிறார்கள். மூளையின் நடுப்பகுதியைத் தன் ஸ்தானமாகக் கொண்ட புத்தி, தனக்கு முந்தைய ஸ்தானத்தைச் சேர்ந்த 'விவேகம் கிரஹித்துக்கொள்கிறது.

"ஓம் அஹம் ஏவ பிரம்மா சிவ சிவ சிவ ஐக்கிய அர்ப்பண நமஹ"

இந்த மந்திரம் உன் புத்தியைப் பவித்திரமாக்குகிறது. இதைத் துபரமய சுத்தி' என்று அழைக்கிறார்கள். உன் மூளையின் மேற்பகுதியைத் தன் ஸ்தானமாகக் கொண்டிருப்பது 'அறிவு' எனும் திறன். உன் மனம் இந்த ஸ்தானத்தை அடைந்ததும் உன் புத்தி' 'அறிவு' கிரஹித்துக் கொள்ளப்படுகிறது. 

“ஓம் சிவ சிவ சிவ சிவ சிவாய நமஹ சம்போ சிவோஹம் "

இந்த மந்திரத்தைச் சொல்வதால் பரமய சுத்தி ஏற்படுகிறது. அதாவது, உன் 'அறிவுத்திறன் பவித்திரமடைகிறது. கபாலத்தின் நடுப்பகுதியில் உன் 'மனத்தை இருக்கும் போது அதைத் தன் இருப்பிடமாகக் கொண்ட ஞானம் உன் 'அறிவுத்திறன்' கிரகித்துக்கொள்கிறது.

நன்றி
"சர்வமும் அவனுக்குள் அடக்கம்"












Saturday, August 1, 2020

கஷாயம் வாரம்

*கஷாயம் வாரம்*

*# திங்கட்கிழமை:*
வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.

*#செவ்வாய்க்கிழமை:*
கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.

*# புதன்கிழமை:*
தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.

*# விழயாகிழமை:*
சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.

*# வெள்ளிக்கிழமை:*
வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.

*# சனிக்கிழமை:*
முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.

*# ஞாயிற்றுக்கிழமை:*
சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.

இப்படி பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Source: what apps