Tuesday, December 15, 2020

இறைவனைத் தவத்தால் உணர முடியும்

ஏனோர் பெருமையை னாகினும் எம்இறை
ஊனேய் சிறுமையுள் உட்கலந் தாங்குளன்
வானோர் அறியும் அளவல்ல மகா
மாதேவன்
தானே அறியும் தவத்திற்கு உள்ளே.

மந்திரம் - 490

 விளக்கம்:

அனைத்து தெய்வங்களையும் விட மாபெரும் பெருமையை உடைய எமது இறைவன் வினைகள் கர்மாக்கள் மூலங்கள் கொண்ட குறைகள் நிறைந்த உயிர்களின் உடல்களிலும் கலந்து இருக்கின்றான். அதாவது எம் தலைவனான இறைவன் ஊன் உடலில் உள்ள குற்றங்களிலும் கலந்து அவற்றுள் விளங்குகின்றான். வானுலகத்திலுள்ள தேவர்களாலும் அறிய முடியாத அளவு இருக்கும் மகாதேவனாகிய அந்த இறைவனை உயிர்கள் தனக்குள் தவம் செய்து நமக்குள்ளேயே அறியலாம்.


Source : Thirumoolar

No comments:

Post a Comment