Wednesday, February 2, 2022

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை

 கண்ணதாசன் கவிதை வரியில் ஒரு  வாணிய செட்டியாரின்  புராணக்கதை!

ஒரு பாடலின் இடையே வரும் ரெண்டு வரிகளில் 

இவ்வளவு பெரிய உண்மை கதை அல்ல நிஜமே 


ஒரு பாடலின் கதை

🎼🎼🎼🎺🎺🎺🎼

இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்...

என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..!

.

“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..” 

.

எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது ..!

ஆனால் இன்று ஏனோ....

இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே , 

மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு...

அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!

.

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ -

 மாமன்

திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”*

.

# பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!

.

இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....

அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..?

.

நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன்...

.

“ அது வந்து.... 

அதாவது.... சிவனின் திருவிளையாடல்களில் 

அதுவும் ஒன்று....

அதற்கு மேல்.... .... முழுசா தெரியலியே..!”

.

# சரி...பாடலை எழுதியவர் யார் என்று பார்த்தேன்..

கண்ணதாசன்...!

.

சும்மா எழுத மாட்டார் கண்ணதாசன்..! 

அவர் ஒரு வரி எழுதினால் ..

அதற்குள்ளே ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்..!

.

கூகிளில் , அங்கும் இங்கும் தேடி ஓடி... 

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையைப் பிடித்தேன்....

அது இதுதான்...!

.

அந்தக் காலத்தில்....காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ....அவன் பெயர் அரதன குப்தன் ....மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்... 

.

காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும் 

தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை...

.

எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ....

உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் .... 

.

வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..

அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..

சற்றுத் தள்ளி ஒரு கிணறு...

கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு ....

அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!

.

காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...

காரணம்...?

அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்... 

.

நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....!

.

தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் ....

.

நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட...

உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்...

.

சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி , 

இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”

.

மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்..

இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ...

அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...!

.

இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.....

.

கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!

.

வழக்கு சபைக்கு வந்தது...

திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்...

“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி...

முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?” 

.

கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்....

கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....!

.

கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”

ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் :

"நாங்கள் சாட்சி.."

.

குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....

ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!

.

“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்... 

ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...! 

.

பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!

.

இப்போதும் , மதுரையில் சுவாமி சன்sனதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்... 

வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்....!

.

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?

.

ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!

இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..!

.

# கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!

.

கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..!

[ “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..]

.

#.. கதையைப் படித்து முடித்த நான் , 

கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்து போனேன் ...!

.

“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?”

.

....கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் , 

இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே..! 

இந்தக் கதையை முழுவதும் படிக்காமல் , 

கண்டிப்பாக கண்ணதாசனால் அந்த ஒரு வரியை எழுதி இருக்க முடியாது..!

.

சரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் ....

அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..?

.

அவற்றை தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை....நூல்களை..புராணங்களை...இதிகாசங்களை அவர் படித்திருக்க வேண்டும் ..?

.

# அத்தனையும் இந்த ஒரு ஜென்மத்தில் , 

எப்படி அந்த காவியத் தாயின் இளைய மகன் கண்ணதாசனுக்கு சாத்தியமாயிற்று ..?

.

“ஆம்...அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த 

நிலையிலும் அவனுக்கு மரணமில்லை”

.

# கண்ணதாசன் வாசிக்க வேண்டிய கவிஞன் மட்டும் அல்ல...

பூஜிக்க வேண்டிய கவிஞன்..!

Source: whatapp

No comments:

Post a Comment